சினிமாவில் நடிகையாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை

சினிமாவில் நடிகையாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை

பிரபல தொலைக்காட்சி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஒருவர் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சினிமாவில் நடிகையாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை

விஜய் டிவியில் இல்லத்தரசிகளின் அதிக கவனத்தை ஈர்த்த தொடராக ஒளிபரப்பாகி வருகிறது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த தொடர் தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன் தம்பிகளிடையே உள்ள உறவையும், கூட்டு குடும்ப வாழ்க்கையையும் மையமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

சினிமாவில் நடிகையாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை

இந்த தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த தொடரில் இணைந்து நடித்து வருகிறார். இதற்கு முன்னர் இந்த கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வந்தார். அவருக்கு இந்த தொடரில் நல்ல வரவேற்பு இருந்தது. சித்ரா தற்கொலை செய்துக்கொண்ட பிறகு அந்த கதாபாத்திரத்தில் இணைந்த காவ்யாவுக்கு முதலில் ஆதரவு இல்லை. பின்னர் இவருக்கும் நல்ல வரவேற்பு இந்த தொடரில் கிடைத்துள்ளது.

சினிமாவில் நடிகையாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை

இந்நிலையில் பரத் – வாணி போஜன் இணைந்து நடிக்கும் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சக்திவேல் இயக்கி வருகிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், துளசி, ராஜ்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் அம்பாசமுத்திரம், தென்காசி பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படத்தில் சின்னத்திரை நடிகை காவ்யாவும் நடிக்க உள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Share this story