ஒத்த செருப்பை அடுத்து பார்த்திபன் கையில் எடுத்துள்ள மற்றுமொரு வித்தியாச முயற்சி!

ஒத்த செருப்பை அடுத்து பார்த்திபன் கையில் எடுத்துள்ள மற்றுமொரு வித்தியாச முயற்சி!

பார்த்திபன் ஒரே ஷாட்டில் ஒரு முழு திரைப்படத்தையும் உருவாக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

உதவி இயக்குனராக திரைத்துரையில் நுழைந்தவர் பார்த்திபன். பின்னர் 1989 ஆம் ஆண்டு ‘புதிய பாதை’ படம் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானார். தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். புதுப்புது முயற்சிகள் எடுப்பதில் வல்லவர் இவர். ஒத்த செருப்பு படமே அதற்கு முழுமுதற் சாட்சி.

ஒத்த செருப்பை அடுத்து பார்த்திபன் கையில் எடுத்துள்ள மற்றுமொரு வித்தியாச முயற்சி!

ஒத்த செருப்பு படம் அனைவரது மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது. மேலும் பல விருதுகளையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.

தற்போது பார்த்திபன் அடுத்த ஒரு வித்தியாச முயற்சியில் ஈடுபட உள்ளார். ஆம், ஒரே ஷாட்டில் ஒரு படத்தை உருவாக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படம் முழுவதும் இடைவெளி இல்லாமல் ஒரே ஷாட்டில் எடுக்கப்படும். இதற்கு அபாரமான உழைப்பு தேவைப்படும் என்பது அனைவர்க்கும் தெரியும். பார்த்திபன் கையில் எடுத்திருக்கும் இந்தப் புது முயற்சிக்கும் வரவேற்புகளும், பாராட்டுகளும் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிங்கிள் ஷாட் படத்தில் பல நடிகர்கள் நடிக்கவிருக்கிறார்கள். ஒரே ஷாட்டில் அவர்கள் எப்படி நடிப்பார்கள் என்பதைக் காண எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இதைத் தவிர பார்த்திபன் மற்ற இயக்குனர்கள் படத்திலும் நடித்து வருகிறார். தற்போது விஜய் சேதுபதி உடன் ‘துக்ளக் தர்பார்‘ படத்தில் நடித்து வருகிறார்.

Share this story