இப்ப நடிக்கலான்னு சொல்றாரா? நடிக்கக் கூடாதுனு சொல்றாரா? பார்த்திபன் பதிவால் குழம்பிய நெட்டிசன்கள்!

இப்ப நடிக்கலான்னு சொல்றாரா? நடிக்கக் கூடாதுனு சொல்றாரா? பார்த்திபன் பதிவால் குழம்பிய நெட்டிசன்கள்!

நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனாக நடிக்கும் 800 படம் பற்றி தான் கோலிவுட் முழுக்க தற்போது பேச்சு.

பலர் விஜய் சேதுபதி இந்தப் படத்தை கைவிடவேண்டும் என்கின்றனர். சிலர் நடிப்பிற்கு எல்லையில்லை, அதில் நடிப்பது அவரது சொந்த முடிவு அதில் யாரும் தலையிடக்கூடாது என்றும் கூறிவருகின்றனர். விஜய் சேதுபதியின் பதிலுக்காகத் தான் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இப்ப நடிக்கலான்னு சொல்றாரா? நடிக்கக் கூடாதுனு சொல்றாரா? பார்த்திபன் பதிவால் குழம்பிய நெட்டிசன்கள்!

இந்நிலையில், வார்த்தைகளால் விளையாடும் பார்த்திபன் தற்போது இந்த விவகாரம் குறித்தும் பதிவிட்டுள்ளார்.

” முத்தையா முரளியின் சூழல் பந்தை,
ஒத்தையா எதிர்கொள்ளும் வி(சய) சேதுபதி…
எதிர்ப்புகள்-எதிர்பார்ப்புகளாக bounce ஆகிவரும்
பந்தினை லாவகமாக அடித்து boundary-யைத்
தாண்டி சிக்சராக விளாசி,(அதாகப்பட்டது தமிழ்
உணர்வறிந்து கைவிட்டேன் என) ஆடியன்ஸ்
மட்டுமில்லாமல் அம்பையர்ஸையும் cheers girls
போல ஆடவைத்து ஆரவாரத்துடன் ‘தமிழ்மக்கள்’ செல்வன்ந்தர்
ஆகிவிடும் வியூகமோ?என்பதென்
யூகம்!!!
(காலங்காத்தால…)நடப்பது நன்மையே.so
நன்மையே நடக்கும் என நம்புவோம்!!!’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவைப் பார்க்கும் நெட்டிசன்கள் அர்த்தம் தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

Share this story