‘ரூபம்’: பார்வதி நாயர் நடிப்பில் உருவாகும் த்ரில்லர் !

‘ரூபம்’: பார்வதி நாயர் நடிப்பில் உருவாகும் த்ரில்லர் !

நடிகை பார்வதி நாயர் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மலையாள நடிகை பார்வதி நாயர் ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் ‘உத்தமவில்லன்’ படத்தில் நடித்தார். ‘கோடிட்ட இடங்களை நிரப்பவும்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘நிமிர்’ படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பெற்றது. தற்போது சில படங்களில் நடித்து வரும் பார்வதி வழக்கமாக போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களிடம் இணைப்பில் இருந்து வருகிறார்.

‘ரூபம்’: பார்வதி நாயர் நடிப்பில் உருவாகும் த்ரில்லர் !

தற்போது பார்வதி நாயர் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ரூபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இப்படத்தை இயக்குகிறார். யூகிக்க முடியாத அளவுக்கு சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் பாணியில் ‘ரூபம்’ தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Image

‘ரூபம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் படக்குழு பணிபுரிந்து வருகிறது. இதில் பார்வதி நாயருடன் முன்னணி இந்தி நடிகர் ஃப்ரெடி டாருவாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவர் தமிழில் ஒப்பந்தமாகியுள்ள முதல் படம் இதுவாகும். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.


Share this story