தங்கச் சிலை ஒன்று தரையில் இறங்கி வந்ததோ… பார்வதி நாயர் அசத்தல் போட்டோஷூட்!

தங்கச் சிலை ஒன்று தரையில் இறங்கி வந்ததோ… பார்வதி நாயர் அசத்தல் போட்டோஷூட்!

‘பாபின்ஸ்’ என்ற மலையாள படம் மூலம் திரைத்துறையில் நுழைந்த பார்வதி நாயர் ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் உத்தமவில்லன் படத்தில் நடித்தார் . ‘கோடிட்ட இடங்களை நிரப்பவும்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நிமிர் படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பெற்றது. என்னை அறிந்தால் படத்தில் மிரட்டல் வில்லியாகவும் நடித்திருந்தார்.

தங்கச் சிலை ஒன்று தரையில் இறங்கி வந்ததோ… பார்வதி நாயர் அசத்தல் போட்டோஷூட்!

பார்வதி நாயர் நடிகை என்பதைத் தாண்டி ஒரு பிஸியான மாடெலும் கூட.  சாஃப்ட்வேர் துறையில் வேலை செய்த இவர் பின்னர் மாடலிங் துறையில் நுழைந்தார். இவர் ‘மிஸ் கர்நாடகா’ மற்றும் ‘மிஸ் நேவி குயின்’ போன்ற அழகி பட்டங்களை வென்றுள்ளார்.

தங்கச் சிலை ஒன்று தரையில் இறங்கி வந்ததோ… பார்வதி நாயர் அசத்தல் போட்டோஷூட்!

தற்போது லாக்டவுன் நேரம் என்பதால் பார்வதி அதிக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். இவருக்கென்று அதிக ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். அரசர்கள் காலத்து ஆடையில் தங்கச் சிலை போல மின்னுகிறார் பார்வதி. இந்த போட்டோஷூட் பிரசன்னா வெங்கடேஷ் என்ற புகைப்பட கலைஞரால் நடத்தப்பட்டுள்ளது.

Share this story