பிறந்தநாள் கொண்டாட்டம்னா இப்டி தான் இருக்கணும்னு சொல்ல வச்ச நடிகை!

பிறந்தநாள் கொண்டாட்டம்னா இப்டி தான் இருக்கணும்னு சொல்ல வச்ச நடிகை!

நடிகை பார்வதி நேற்று தனது பிறந்தநாளை ஓர் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுடன் கொண்டாடியுள்ளார். மேலும் மரங்கன்றுகளையும் நட்டுள்ளார். பார்வதியின் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் பாராட்டைப் பெற்று வருகிறது.

பார்வதி தனது பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா கணக்குகளில் பகிர்ந்து கொண்டார். “மரக்கன்றுகள் நட்டு, இந்த அற்புதமான மனிதர்களுடன் முதியோர் இல்லத்தில் நேரத்தை செலவிட்டேன். இதைவிட எனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடியிருக்க முடியாது. உங்கள் வாழ்த்துக்களுக்கு என் இதயபூர்வமான நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

Image

புகைப்படங்களைப் பார்க்கும் போது பார்வதி தனது குடும்பத்தினருடன் முதியோர் இல்லம் சென்று பிறந்தநாள் கொண்டாடியதாகத் தெரிகிறது.

தற்போது நடிகை பார்வதி ரூபம் என்ற படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இப்படத்தை இயக்குகிறார். யூகிக்க முடியாத அளவுக்கு சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் பாணியில் ‘ரூபம்’ தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share this story