நியூஸ்பேப்பரில் புடவை கட்டிய பார்வதி நாயர் !

நியூஸ்பேப்பரில் புடவை கட்டிய பார்வதி நாயர் !

மலையாள நடிகை பார்வதி நாயர் ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் ‘உத்தமவில்லன்’ படத்தில் நடித்தார். ‘கோடிட்ட இடங்களை நிரப்புக ’ படத்தில் ஷாந்தனுவை மயக்கும் ஒரு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ‘நிமிர்’ படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பெற்றது.

சமீபத்தில் பார்வதி நாயர் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ரூபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்றது. இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இப்படத்தை இயக்குகிறார்.

சமூகவலைத்தள பக்கங்களில் வழக்கமாக போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களிடம் இணைப்பில் இருந்து வரும் பாரு தற்போது செய்திதாளைப் போன்ற ஒரு புடவையை உடுத்தி போட்டோ வெளியிட்டுள்ளார். அதற்கு தலைப்பாக , ”நியூஸ்பேப்பர் படிக்கும் பழக்கம் இல்லை எனக்கு. அதனால், அதனை புடவையாக கட்டிகொன்டேன்” என பதிவிட்டுள்ளார். இந்த புடவை விரைவில் ட்ரெண்ட் ஆகி பாரு புடவை காலெக்ஷனில் இடம்பெற்றுவிடும் போலிருக்கிறது.

Share this story