அனுராக் காஷ்யப்பை பொய் கண்டறிதல் மற்றும் போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்த வலியுறுத்தும் பயல் கோஷ்!

அனுராக் காஷ்யப்பை பொய் கண்டறிதல் மற்றும் போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்த வலியுறுத்தும் பயல் கோஷ்!

நடிகை பயல் கோஷ், தான் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையில் அனுராக்கை போதைப்பொருள் சோதனை மற்றும் பொய் கண்டறிதல் சோதனைகளுக்கு உட்படுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு, இயக்குனர் அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பயல் கோஷ் குற்றம் சாட்டினார். இது பாலிவுட்டில் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. பின்னர் அனுராக் இந்த குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை என்று மறுப்பு தெரிவித்திருந்தார்.

அனுராக் காஷ்யப்பை பொய் கண்டறிதல் மற்றும் போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்த வலியுறுத்தும் பயல் கோஷ்!

பின்னர் அனுராக் காஷ்யப் இந்த வழக்கிற்காக விசாரணைக்கு அழைக்கபட்டார். விசாரணையில் அவர் “தான் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றசாட்டுகள் யாவும் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை.” என்று தெரிவித்துள்ளார். மேலும் பயல் கோஷ் இந்த சம்பவம் நடந்ததாகக் காலத்தில் (ஆகஸ்ட் 2013) தான் இலங்கையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அனுராக் காஷ்யப்பை பொய் கண்டறிதல் மற்றும் போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்த வலியுறுத்தும் பயல் கோஷ்!

தற்போது நடிகை பயல் அனுராக் காஷ்யப்பை பொய் கண்டறிதல் சோதனைக்கு உட்ப்படுத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டீவீட்டில் “திரு காஷ்யப் தனது அறிக்கையில் போலீசார் முன் பொய் கூறியுள்ளார். உண்மையை அறிய காஷ்யப்பை போதைப்பொருள் சோதனை, பொய் கண்டறிதல் மற்றும் பாலிகிராஃப் சோதனை ஆகிய சோதனைகளுக்கு உட்படுத்தி உண்மையை அறிய எனது வழக்கறிஞர் ஒரு விண்ணப்பம் அளித்துள்ளார். இந்த வழக்கில் நீதி கிடைப்பதற்காக இன்று காவல் நிலையத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்படும், ” என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த டீவீட்டில் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா இருவரையும் டேக் செய்திருந்தார்.

Share this story