இரவு பகலாக நடந்துவரும் படப்பிடிப்பு… தீபாவளிக்கு வெளியாகும் பொன்னியின் செல்வன்!?

இரவு பகலாக நடந்துவரும் படப்பிடிப்பு… தீபாவளிக்கு வெளியாகும் பொன்னியின் செல்வன்!?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்‘ படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

பொன்னியன் செல்வன் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடந்து வருகிறது. படக்குழுவினர் படத்தை விரைவில் முடிப்பதற்காக இரவு பகலாக உழைத்து வருகின்றனராம்.

இரவு பகலாக நடந்துவரும் படப்பிடிப்பு… தீபாவளிக்கு வெளியாகும் பொன்னியின் செல்வன்!?

காலை 8 மணிக்கெல்லாம் அனைவரும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட வேண்டுமாம். பின்னர் இரவு 11 மணி வரை தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்படுகிறதாம். மேலும் கார்த்தியின் நடிப்பும் அர்ப்பணிப்பும் இயக்குனரை வியப்பில் ஆழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.

தற்போது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வருடம் தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இரவு பகலாக நடந்துவரும் படப்பிடிப்பு… தீபாவளிக்கு வெளியாகும் பொன்னியின் செல்வன்!?

இப்படத்தில் விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் ஆகியோர் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

Share this story