பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நடிகர்…

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கியின் நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்படுக்கிறது. பல பேர் எடுக்க முயற்சித்தும் முடியாமல் போன நிலையில் இத்திரைக் காவியத்தை இரு பாகங்களாக எடுக்க இருக்கிறார் மணிரத்னம்.

பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நடிகர்…

அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் கொரானா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டது.

பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நடிகர்…

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது கொரானா காலம் என்பதால் அரசு வகுத்த வழிமுறைகளுடன் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களுடன் ஹைதாராபாத் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. எந்த காட்சிகள் எடுக்கப்படுகிறதே, அந்த காட்சிக்கான நடிகர்கள் மட்டும் நடித்து வருகின்றனர். இப்போது விக்ரம் உட்பட சில நடிகர்களை வைத்து மட்டும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நடிகர்…

பொன்னியின் செல்வன் பெரிய கதைக்களம் கொண்டதால் ஏராளமான நடிகர்கள் இணைந்துக்கொண்டே இருக்கின்றனர். அதன்படி நடிகர் பிரகாஷ் ராஜ், படத்தில் இணைந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் செட்டில், மாஸ்டருடன் ஒரு பயணம். 25 ஆண்டுகளுக்கு முன்பு இருவர் படத்தில் தொடங்கிய பயணம் இது. புதிய எல்லைகளை கண்டுப்பிடிப்பதில் ஆனந்தம் என அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தை உருவாக்க கடுமையான உழைத்து வரும் மணிரத்னம், இதை இரு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டும் திரைக்கு வரும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this story