மீண்டும் தொடங்கிய ‘பொன்னியின் செல்வன்’ படபிடிப்பு

மீண்டும் தொடங்கிய ‘பொன்னியின் செல்வன்’ படபிடிப்பு

காவிய படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.

மணிரத்னத்தின் காவிய படமான பொன்னியின் செல்வன் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடைசியாக தாய்லாந்தில் படபிடிப்பு 90 நாட்களுக்கு மேல் படமாக்கப்பட்டது. நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் படப்பிடில் பங்கேற்றனர். திட்டமிட்டபடி ஷூட்டிங் முடித்த பின்னர், கொரோனா காரணமாக ஷூட்டிங்கை நிறுத்தியது படக்குழு .

மீண்டும் தொடங்கிய ‘பொன்னியின் செல்வன்’ படபிடிப்பு

பின்னர், 9மாத இடைவெளிக்கு பிறகு சில கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்ட செட்டில் ஷூட்டிங் நடைபெற்றது.

மீண்டும் தொடங்கிய ‘பொன்னியின் செல்வன்’ படபிடிப்பு

இதற்காக ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் ஐதராபாத் விரைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓட்டல் அறையிலிருந்து படப்பிடிப்புத் தளத்துக்கு மட்டுமே செல்ல வேண்டும். படப்பிடிப்பு முடிந்தவுடன் ஓட்டல் அறைக்குச் செல்ல வேண்டும் எனவும் இதற்கிடையில் வேறு எங்கும் பயணிக்கக் கூடாது என்று படக்குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மீண்டும் தொடங்கிய ‘பொன்னியின் செல்வன்’ படபிடிப்பு

மேலும், படப்பிடிப்புத் தளத்துக்கு வந்துவிட்டால் பணிகள் அனைத்துமே முடித்துவிட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, அமிதாப் பச்சன், மோகன் பாபு மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this story