புதிய சாதனை படைத்த ‘பூவே பூச்சூடவா’… ரசிகர்களுக்கு நன்றி கூறிய சின்னத்திரை நடிகை !

புதிய சாதனை படைத்த ‘பூவே பூச்சூடவா’… ரசிகர்களுக்கு நன்றி கூறிய சின்னத்திரை நடிகை !

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’பூவே பூச்சூடவா’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

புதிய சாதனை படைத்த ‘பூவே பூச்சூடவா’… ரசிகர்களுக்கு நன்றி கூறிய சின்னத்திரை நடிகை !

கடந்த 2018ம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘பூவே பூச்சூடவா’. இந்த சீரியலில் சக்தி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் ரேஷ்மா. இந்த கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது . இதே சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் மதன். இந்த சீரியலின் மூலம் ரேஷ்மாவுக்கும், மதனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.

புதிய சாதனை படைத்த ‘பூவே பூச்சூடவா’… ரசிகர்களுக்கு நன்றி கூறிய சின்னத்திரை நடிகை !

இந்நிலையில் பூவே பூச்சூடவா சீரியல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இந்த சீரியல் முதன்முதலாக 1000 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த தகவலை தனது வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து சின்னத்திரை நடிகை ரேஷ்மா, “இது எங்களது வெற்றி அல்ல. இதற்கு காரணம் நீங்கள் தான். இந்த சீரியலுக்கு பெரிய வரவேற்புக்கு ரசிகர்களாகிய உங்களுக்கு மிகவும் நன்றி என்று கூறியுள்ளார்.

Share this story