கேஜிஎஃப் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் பிரபாஸ்!?

கேஜிஎஃப் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் பிரபாஸ்!?

கடந்த ஆண்டு வெளியாகி இந்தியா முழுதும் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆன படம் கேஜிஎஃப் படத்தின் இந்திய அளவில் கவனம் பெற்றார் இயக்குனர் பிரஷாந்த் நீல். தற்போது ‘கேஜிஎஃப் 2’ படத்திற்காக மிகவும் மும்மரமாக பணியாற்றி வருகிறார்.
Prashanth Neel (@prashanth_neel) | Twitter
பிரஷாந்த் நீல் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது. தற்போது இயக்குனர் பிரஷாந்த் நீல் தனது அடுத்த படத்தில் பிரபாஸுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

கேஜிஎப் படத்தைத் தயாரித்த ஹம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் டிசம்பர் 2-ம் தேதி தங்கள் நிறுவனம் தயாரிக்க இருக்கும் பெரிய பட்ஜெட் படத்தின் அறிவிப்பை வெளியிட இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் பிரஷாந்த் நீல் பிரபாஸைச் சந்தித்துப் பேசினார். எனவே இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது ஹம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு அதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

எனவே இந்த பிரம்மாண்டக் கூட்டணி இணைவார்கள் என்று டோலிவுட் வட்டாரங்களும் தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையில் பிரபாஸ், ராதே கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். பின்னர் நாக் அஸ்வின் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். அதையடுத்து ஓம் ரவுத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ படத்திலும் நடிக்க உள்ளார்.

Share this story