மோகன்லால், சூர்யாவிற்கு ‘க்ரீன் இந்தியா’ சவால் விடுத்துள்ள பிரகாஷ் ராஜ்!

மோகன்லால், சூர்யாவிற்கு ‘க்ரீன் இந்தியா’ சவால் விடுத்துள்ள பிரகாஷ் ராஜ்!

நடிகர் பிரகாஷ் ராஜ் க்ரீன் இந்தியா சேலஞ்சில் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Image

இந்தியாவைப் பசுமையாக க்ரீன் இந்தியா என்ற பெயரில் சேலஞ்ச் ஒன்றை தெலுங்கானா அமைச்சர் சந்தோஷ் குமார் துவக்கினார். பின்னர் திரையுலக பிரபலங்கள் பலர் இந்த க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர். முதலில் சமந்தா, மாமனார் நாகர்ஜுனாவுடன் மரங்கன்று நட்ட புகைப்படத்தை வெளியிட்டார்.

பின்னர் தெலுங்கு ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு தனது பிறந்தநாளன்று மரங்கன்று நட்டு பசுமை இந்தியா சேலஞ்சை பூர்த்தி செய்தார். அதோடு அவர் வெளியிட்ட பதிவில் நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்குமாறு பரிந்துரை செய்தார்.

அதையடுத்து மகேஷ் பாபுவின் சேலஞ்சை ஏற்ற விஜய் தன்னுடைய வீட்டில் மரக்கன்று நட்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். பின்னர் ஸ்ருதி ஹாசன், ராணா என நட்சத்திரங்கள் பலர் இந்த சேலஞ்சை ஏற்றனர்.

தற்போது நடிகர் பிரகாஷ் ராஜும் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று மரக்கன்றுகள் நட்டுள்ளார். மேலும் மோகன்லால், சூர்யா, ரக்ஷித் ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், த்ரிஷா ஆகியோரைப் பரிந்துரை செய்துள்ளார். மேலும் இந்தத் திட்டத்தைத் துவக்கிய அமைச்சர் சந்தோஷ் குமாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Share this story