தெறித்து ஓடும் இயக்குனர்கள்… அப்பா மீது அதிருப்தி அடைந்த பிரஷாந்த்!
பிரஷாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘அந்தகன்’ படத்தில் பணியாற்ற இந்தத் இயக்குனரும் முன்வரவில்லை என்று கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடிப்பில் 2018-ல் வெளியான ‘அந்தாதுன்’ என்ற இந்தித் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இந்தப் படம் மலையாளம், தெலுங்கு தமிழ் என பல மொழிகளில் ரீமேக் ஆகி வருகிறது.
அந்தாதுன் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் வாங்கியுள்ளார். அதில் தனது மகன் பிரஷாந்த்தை ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளார்.
முதலில் இந்தப் படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கவிருந்தார். பின்னர் அவர் இந்தப் படத்திலிருந்து விலகினார். அதையடுத்து ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய ஜேஜே பிரெட்ரிக் இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து பிரட்ரிக்கும் இந்தப் படத்தில் இருந்து விலகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாகவே தியாகராஜன் படத்தில் வேலை செய்பவர்களுக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும் என்று கோலிவுட் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பேசிய இயக்குனர்கள் பலரும் படத்திலிருந்து விலகியதால் இயக்குனர் தரணியை வைத்து இயக்கத் திட்டமிட்டாராம் தியாகராஜன்.
பின்னர் அவரும் வருவதாகத் தெரியவில்லை. எனவே தியாகராஜன் தானே இயக்கத் திட்டமிட்டு வருகிறாராம். இயக்குனர்கள் மாறிக்கொண்டே இருப்பதால் பிரஷாந்த் தன் அப்பா தியாகராஜன் மீது கோபமடைந்துள்ளாராம்.