பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் குருதி!

பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் குருதி!

நடிகர் பிரித்விராஜ் தற்போது ‘கோல்ட் கேஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குனர் மனு வாரியர் என்பவர் இயக்கும் ‘குருதி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படம் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இப்படம் பொலிட்டிக்கல் த்ரில்லர் ஜேர்னரில் உருவாகி வருகிறது.

பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் குருதி!

முரளி கோபி, ரோஷன் மேத்யூ, ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீந்தா, மணிகண்டன் ஆர் ஆச்சாரி, நவாஸ் வள்ளிக்குன்னு, மம்முக்கோயா, நஸ்லென் மற்றும் சாகர் சூர்யா ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளனர்.

“கடந்த சில மாதங்களாக நாங்கள் முழு நடிகர்களையும் ஒன்றாக இணைத்தோம். பிருத்வி கதாநாயகனாக நடித்தாலும், மற்ற எல்லா கதாபாத்திரங்களுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.” என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் குருதி!


அனிஷ் பல்லால் கதை எழுதியுள்ள இப்படத்தை ஒளிப்பதிவாளர் அபினந்தன் ராமானுஜம் மற்றும் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பெஜாய் போன்றவர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

Share this story