நியூ யார்க் நகரில் இந்திய உணவகம் துவங்கும் பிரியங்கா சோப்ரா!

நியூ யார்க் நகரில் இந்திய உணவகம் துவங்கும் பிரியங்கா சோப்ரா!

நடிகை ப்ரியங்கா சோப்ரா கணவருடன் இணைந்து புதிய தொழில் ஒன்றைத் துவங்கியுள்ளார்.

பாலிவுட் நடிகை, இந்திய நடிகை என வலம் வந்த ப்ரியங்கா சோப்ரா தற்போது உலக நடிகையாக விஸ்வருபம் எடுத்துள்ளார். இவர் தற்போது ஒரு குளோபல் ஐகானாக மாறியுள்ளார்.

நியூ யார்க் நகரில் இந்திய உணவகம் துவங்கும் பிரியங்கா சோப்ரா!

ஹாலிவுட் நடிகர் மற்றும் பாடகர் நிக் ஜோனாசைத் திருமணம் செய்துகொண்டு ஹாலிவுட்டில் குடியேறிவிட்டார். தொடர்ந்து பல முன்னெடுப்புகளையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய உணவகம் ஒன்றை தொடங்க உள்ளார். இந்து முறைப்படி பூஜையுடன் அதற்கான ஆயத்தப் பணிகளைத் துவங்கியுள்ளார். அந்தப் பூஜையில் கணவர் நிக் ஜோனாஸ் உடன் பிரியங்கா சோப்ரா கலந்துள்ளார்.

நியூ யார்க் நகரில் இந்திய உணவகம் துவங்கும் பிரியங்கா சோப்ரா!

“நியூ யார்க் நகரில் சோனா என்ற புதிய உணவகத்தை உங்களுக்கு வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இந்திய உணவு மீதான என் அன்பை நான் இதில் அதிகமாக சேர்த்துள்ளேன்.

சோனா என்பது காலமற்ற இந்தியாவின் உருவகமாகவும், நான் வளர்ந்த சுவைகளாகவும் இருக்கும். இந்த மாத இறுதியில் சோனா திறக்கப்படுகிறது, அதற்காக மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

நியூ யார்க் நகரில் இந்திய உணவகம் துவங்கும் பிரியங்கா சோப்ரா!

Share this story