டாக்டவுனில் செல்ல நாயுடன் ஊர்சுற்றிய பிரபல நடிகை… போலீஸ் கடும் எச்சரிக்கை

டாக்டவுனில் செல்ல நாயுடன் ஊர்சுற்றிய   பிரபல நடிகை…  போலீஸ் கடும் எச்சரிக்கை

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, டாக்டவுனில் ஊர் சுற்றியதால் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

தமிழில் விஜய் நடித்த தமிழன் படம் மூலம் அறிமுகமானவர் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. இப்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் அவர், நடிகர் நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

டாக்டவுனில் செல்ல நாயுடன் ஊர்சுற்றிய   பிரபல நடிகை…  போலீஸ் கடும் எச்சரிக்கை

ஜிம் ஸ்ட்ரூஸ் இயக்கும் டெக்ஸ்ட் ஃபார் யூ (Text For You) என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் பிரியங்கா. இந்தப் படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்து வருகிறது. இதற்காக தனது கணவர் நிக் ஜோனாஸ், அம்மா மது சோப்ரா ஆகியோருடன் அங்கு சென்றுள்ளார்.

டாக்டவுனில் செல்ல நாயுடன் ஊர்சுற்றிய   பிரபல நடிகை…  போலீஸ் கடும் எச்சரிக்கை

இங்கிலாந்தில் இப்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருகிறது. இதனால், நாடு முழுவதும் மூன்றாவது முறையாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகளின்படி, சலூன், ஸ்பா, மால்கள் முடப்பட்டுள்ளன. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் நடிகை பிரியங்கா தனது அம்மா மற்றும் செல்ல நாயுடன், பிரபல சிகை அலங்கார நிபுணர் ஜோஷ் வூட்டின், சலூனுக்கு சென்றார். இதைத் தொடர்ந்து லாக்டவுன் விதிகளை மீறியதாக, பிரியங்கா சோப்ராவை போலீசார் எச்சரித்தனர்.

டாக்டவுனில் செல்ல நாயுடன் ஊர்சுற்றிய   பிரபல நடிகை…  போலீஸ் கடும் எச்சரிக்கை

சலூன் உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்ததாக லண்டன் மீடியாவில் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இதை, நடிகை பிரியங்கா சோப்ரா மறுத்துள்ளார். ‘படப்பிடிப்பு தொடர அங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக, ஹேர் கலரிங் செய்வதற்காக போலீஸ் அனுமதி பெற்றே அவர் சென்றார். இதில் விதிமீறல் ஏதும் நடக்கவில்லை’ என்று நடிகை பிரியங்கா சோப்ராவின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Share this story