‘மாயவன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது… சிவி குமார் ஸ்பெஷல் அப்டேட்!

‘மாயவன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது… சிவி குமார் ஸ்பெஷல் அப்டேட்!

தயாரிப்பாளர் சிவி குமார் இயக்குனராகவும் களமிறங்கி இரு படங்களை இயக்கினார். மூன்றாவதாக கொற்றவை என்ற படத்தை இயக்கி வந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது.

தற்போது தான் இயக்கிய ‘மாயவன்’ படத்தின் அடுத்த பாகத்தை இயக்கத் தயாராகி வருவதாக அறிவித்துள்ளது சிவி குமார்.

‘மாயவன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது… சிவி குமார் ஸ்பெஷல் அப்டேட்!

சந்தீப் கிஷன் மற்றும் லாவண்யா திரிபாதி ஆகியோர் நடிப்பில் சிவி குமார் இயக்கத்தில் வெளியான ‘மாயவன்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சயின்ஸ் பிக்ஷன் ஜேர்னரில் அப்படம் உருவாகியிருந்தது. அந்தப் படத்தின் மீதான வரவேற்பை அடுத்து தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் தயாராகியுள்ளார் சிவி குமார். அந்தப் படத்திற்கு மாயவன் Reloaded என்று தலைப்பு வைத்துள்ளனர்.

அதையடுத்து ‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று ஒருவர் கேள்ள்வியெழுப்பியதற்கு “மக்கள் செல்வன் இப்போது மிகப்பெரிய மாஸ் ஹீரோ ஆகிவிட்டார். சூதுகவ்வும் ஒரு சிறிய டார்க் காமெடி படம். மேலும் அதில் நடித்த மற்ற நடிகர்களும் இப்போது பெரிய ஹீரோக்களாக மாறியுள்ளனர். அதனால் இரண்டாம் பாகம் எடுக்க அவர்களை ஒன்று சேர்ப்பது மிகவும் கடினம்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது துவங்கும் என்ற கேள்விக்கு மே முதல் வாரம் துவங்குகிறது என்றும் பதிலளித்துள்ளார்.

Share this story