பிறந்தநாளில் ராஷி கண்ணாவை ஆச்சர்யப்படுத்திய பெற்றோர்கள்!

பிறந்தநாளில் ராஷி கண்ணாவை ஆச்சர்யப்படுத்திய பெற்றோர்கள்!

தெலுங்கு நடிகை ராஷி கண்ணா ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். ராஷி கண்ணாவிற்கு இளைஞர்கள் ஆதரவு அதிகம் என்றே சொல்லலாம்.

ராஷி கண்ணா கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.

தற்போது ராஷி தனது பிறந்தநாளில் பெற்றோர் அளித்த ஆச்சரியத்தைப் பற்றி பதிவிட்டுள்ளார்.

“பிறந்தநாள் இரவு பற்றி இந்த கடைசிக் குறிப்பைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் ..
எனக்கு கொண்டாட்டங்கள் பிடிக்கும். பொதுவாக எல்லா நாளையும் கொண்டாடுவேன். குறிப்பாக பிறந்தநாளை. இது தொற்று காலம் என்பதால் என்னால் என் அன்புக்குரியவர்களை அழைக்க முடியவில்லை. இருப்பினும், என்னிடம் உள்ள ஆச்சரியமான பெற்றோர்கள், என் அன்புக்குரியவர்கள் அனைவருடனும் ஒரு மெய்நிகர் சந்திப்புடன் என்னை ஆச்சரியப்படுத்த முடிவு செய்தனர். (அவர்கள் தங்களின் நேரத்தை ஒதுக்கி சில அற்புதமான பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுப்பினர்!) இந்த முழு விஷயத்தையும் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் அலங்கரித்தார்! நான் உணர்ச்சிவசத்தில் மூழ்கி விட்டேன். சிறந்தவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story