ஜெய்ப்பூரில் எஸ்.பி.பி. உருவப்படத்திற்கு விஜய் சேதுபதி, தாப்ஸி மரியாதை!

ஜெய்ப்பூரில் எஸ்.பி.பி. உருவப்படத்திற்கு விஜய் சேதுபதி, தாப்ஸி மரியாதை!

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் எஸ்.பி.பி. உருவப்படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது.

பிரபல பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம், உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். கடந்த 50 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி.பி., எல்லோரின் பிரார்த்தனையையும் பொய்யாக்கிவிட்டு, நேற்று மதியம் 1.04 மணிக்கு இன்னுயிரை நீத்தார்.

ஜெய்ப்பூரில் எஸ்.பி.பி. உருவப்படத்திற்கு விஜய் சேதுபதி, தாப்ஸி மரியாதை!

எஸ்.பி.பி.யின் மறைவுக்கு இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர் தொடங்கி அனைவரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் நேற்றில் இருந்தே வீடியோ மற்றும் ட்விட்டர் பதிவுகள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய் சேதுபதி, தாப்ஸி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் எஸ்.பி.பி. உருவப்படத்தின் முன் விளக்கேற்றி மெளன அஞ்சலி செலுத்தினர்.

Image

பிரபல இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கிவரும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதி – தாப்ஸி இருவரும் இரண்டு வேடங்களில் நடிக்கின்றனர். ராதிகா சரத்குமார், யோகி பாபு, மதுமிதா, சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராம்பாக் மற்றும் சமோத் ஆகிய பிரமாண்ட மாளிகைகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடித்த ‘அடிமைப்பெண்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதன்பிறகு அங்கு நடக்கும் தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story