பேத்தியுடன் ராதிகா… வைரலாகும் புகைப்படம்…

பேத்தியுடன் ராதிகா… வைரலாகும் புகைப்படம்…

நடிகை ராதிகா, தனது பேத்தியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேத்தியுடன் ராதிகா… வைரலாகும் புகைப்படம்…

80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா. ‘கிழக்கே போகும் ரயிலே’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், ரஜினி, கமல்,விஜயகாந்த் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அதன்பிறகு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

பேத்தியுடன் ராதிகா… வைரலாகும் புகைப்படம்…

பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். நடிகை ராதிகாவே நடித்து தயாரித்த இந்த சீரியல் ரசிகர்களின் பிரம்மாண்ட ஆதரவை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த சீரியலின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் இருந்து சமீபத்தில் விலகினார் ராதிகா. இதனால் இல்லதரசிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பேத்தியுடன் ராதிகா… வைரலாகும் புகைப்படம்…

இதையடுத்து தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார் ராதிகா.அரசியலில் பிசியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ராதிகா தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.அதில் தனது பேத்தி ராத்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பேத்தியுடன் ராதிகா… வைரலாகும் புகைப்படம்…

இந்த புகைப்படத்தில் தனது செல்லப் பேத்தியை மடியில் அமர வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், ஒரு அழகான கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், ஒவ்வொருவரும் குறிக்கோள் மற்றும் நோக்கத்துடனே எழுகிறார்கள், லட்சியத்தை எப்போதும் கைவிடாதீர், அதற்கான வேலைகளை செய்ய தயாராக இருக்கவேண்டும் என‌ பதிவிட்டுள்ளார்.

Share this story