100 எபிசோடுகளை கடந்த ‘ராஜா ராணி 2’… நன்றி தெரிவித்த ‘சித்து’

100 எபிசோடுகளை கடந்த ‘ராஜா ராணி 2’… நன்றி தெரிவித்த ‘சித்து’

100 எபிசோடுகளை கடந்து ‘ராஜா ராணி 2’ சாதனை படைத்ததற்கு ரசிகர்களுக்கு நன்றி என சீரியலின் ஹீரோ சித்து தெரிவித்துள்ளார்.

100 எபிசோடுகளை கடந்த ‘ராஜா ராணி 2’… நன்றி தெரிவித்த ‘சித்து’

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியின் தொடர்ந்து இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹீரோவாக நடிகர் சித்து நடித்து வருகிறார். இவர் கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த, ‘திருமணம்’ சீரியலின் ஹீரோவாக நடித்தவர். இதேபோன்று ஹீரோயினாக முதல் பாகத்தில் நடித்த ஆல்யா மானசாவே நடித்து வருகிறார்.

100 எபிசோடுகளை கடந்த ‘ராஜா ராணி 2’… நன்றி தெரிவித்த ‘சித்து’

மேலும் இந்த சீரியலில், பிரவீனா, சைவம் ரவி, பாலாஜி தியாகராஜன் தயாளன், வி.ஜே.அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஒரு சாதாரண குடும்பத்தில்மாமியார், மருமகள் இடையே நடக்கும் பிரச்சனையை வைத்து காட்சிகள் நகர்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 100 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக கதாநாயகனாக நடிக்கும் சித்து, தனது சமூக ஊடகத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த வெற்றியை சீரியலின் நடிக்கும் நடிகர்கள் மற்றும் குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

100 எபிசோடுகளை கடந்த ‘ராஜா ராணி 2’… நன்றி தெரிவித்த ‘சித்து’

இது குறித்து சீரியலின் ஹீரோ சித்து கருத்து ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “இதுக்கு மேல ஓரு ஆர்டிஸ்ட்டுக்கு என்ன வேணும்”… என் அன்பான குடும்பத்தினர் அனைவரையும் நான் நேசிக்கிறேன். நீங்கள் என் வாழ்க்கையில் இருப்பது என் பாக்கியமாக கருதுகிறேன். வாய்ப்பளித்த பிரவீன் பென்னெட் அண்ணாவுக்கு மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Share this story