‘த்ரிஷ்யம் 2’ படத்தைப் பார்த்த ராஜமௌலி என்ன சொன்னார் தெரியுமா!?

‘த்ரிஷ்யம் 2’ படத்தைப் பார்த்த ராஜமௌலி என்ன சொன்னார் தெரியுமா!?

த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தைப் பார்த்த ராஜமௌலி, இயக்குனர் ஜீத்து ஜோசப்பை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

2013-ம் ஆண்டு இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்‘ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நேர்த்தியான திரைக்கதையுடம் படம் முழுவதும் விறுவிறுப்புடன் நகர்த்தி படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கினார் ஜீத்து ஜோசப்.

‘த்ரிஷ்யம் 2’ படத்தைப் பார்த்த ராஜமௌலி என்ன சொன்னார் தெரியுமா!?

அதையடுத்து இந்தப் படம் இந்தியாவின் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட் ஆனது. சிங்களம், சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட பெருமையைப் பெற்றது.

இந்நிலையில், முதல் பாகம் வெளியாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியது. இரண்டாம் பாகமும் முதல் பாகத்தின் விறுவிறுப்பை அப்படியே கொடுத்து வெற்றி பெற வைத்தது.

தற்போது இந்தப் படத்தைப் பார்த்த இயக்குனர் ராஜமௌலி இயக்குனர் ஜீத்து ஜேசப்பை புகழ்ந்து அவருக்கு செய்தி அனுப்பியுள்ளார். அதை ஜீத்து ஜோசப் பகிர்ந்துள்ளார்.

‘த்ரிஷ்யம் 2’ படத்தைப் பார்த்த ராஜமௌலி என்ன சொன்னார் தெரியுமா!?

“ஹாய் ஜீத்து. நான் ராஜமௌலி, திரைப்பட இயக்குனர். சில தினங்களுக்கு முன்பு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை பார்த்தேன். திரிஷ்யம் முதல் பாகத்தை நான் பார்த்தது என் நினைவில் இன்னும் நீங்காமல் இருக்கிறது.(தெலுங்கில் மட்டும் தான் நான் பார்த்தேன்.) படத்தின் கதை, திரைக்கதை, நடிப்பு, எடிட்டிங் ஆகியவை மிகச்சிறப்பாக இருந்தது என்பதை சொல்லியே ஆகவேண்டும். ஆனால் இந்த படத்தின் கதை உண்மையில் வேறு ஏதோ ஒரு உணர்வைக் கொடுக்கிறது. அது உலகத் தரமாக இருக்கிறது. முதல் பாகம் ஒரு மாஸ்டர் பீஸ். இரண்டாம் பாகம் என்று வரும்போது முதல் பாகத்தின் கதை ஓட்டத்தில் அப்படியே பொருந்துகிறது. முதல்பாகம் கொடுத்த அதே விறுவிறுப்பை இரண்டாம் பாகத்திலும் அதே மாதிரி கொடுத்துள்ளீர்கள். உங்களிடமிருந்து இது போன்ற ஆக்கபூர்வமான படைப்புகளை எதிர்பார்க்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story