சென்னையை அடுத்து ஷூட்டிங் எங்கே ? ‘அண்ணாத்த’ படத்தின் புதிய அப்டேட்…

சென்னையை அடுத்து ஷூட்டிங் எங்கே ? ‘அண்ணாத்த’ படத்தின் புதிய அப்டேட்…

‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் அடுத்து எங்கு நடக்கவிருக்கிறது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை அடுத்து ஷூட்டிங் எங்கே ? ‘அண்ணாத்த’ படத்தின் புதிய அப்டேட்…

நடிகர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய படக்குழு தீயாய் வேலை பார்த்து வருகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்து வருகிறார் டி.இமான்.

சென்னையை அடுத்து ஷூட்டிங் எங்கே ? ‘அண்ணாத்த’ படத்தின் புதிய அப்டேட்…

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. கடந்த மாதம் முதல் இந்த படத்தை ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வந்தது. சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வந்த இந்த ஷூட்டிங்கில் ரஜினியுடன், நயன்தாரா இணைந்து நடிக்கும் பாடல் ஒன்று அழகாக படமாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒரு சண்டைக்காட்சி அதிரடியாக படமாக்கப்பட்டது. இதையடுத்து வரும் நவம்பர் 4ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு சிறிய இடைவேளை விடப்பட்டிருந்தது.

சென்னையை அடுத்து ஷூட்டிங் எங்கே ? ‘அண்ணாத்த’ படத்தின் புதிய அப்டேட்…

இந்நிலையில் இந்த படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த கட்ட ஷூட்டிங்கை தொடங்குவதற்கான பணிகளை செய்து வருகிறார் இயக்குனர். இதையடுத்து இந்த ஷூட்டிங்கை விரைவில் கொல்கத்தாவில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஷூட்டிங்கை சுமார் 1 மாதம் வரை நடைபெறும் என கூறப்படுகிறது. அங்கு நடைபெறும் ஷூட்டிங்கில் நடிகர் ரஜினி, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ உள்ளிட்டோர் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு விரைவில் கொல்கத்தா செல்ல உள்ளது.

Share this story