மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் ரஜினி… இயக்குனர் யார் தெரியுமா!?

மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் ரஜினி… இயக்குனர் யார் தெரியுமா!?

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பின் கீழ் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இன்னும் சில காட்சிகளே படமாக்கப்பட வேண்டி இருப்பதால் படம் விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் ரஜினி… இயக்குனர் யார் தெரியுமா!?

தற்போதைய அப்டேட் என்னவென்றால், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி மீண்டும் ஒரு படத்தில் நடிகை சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியானால் இது ரஜினி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் 4-வது படமாக இருக்கும்.

மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் ரஜினி… இயக்குனர் யார் தெரியுமா!?

தற்போது இந்தப் படத்தின் இயக்குனர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் என இருவர் பெயர் பேசப்பட்டு வருகிறது. ‘பேட்ட’ படம் ஹிட் கொடுத்த பிறகு மீண்டும் ரஜினி கார்த்திக் சுப்புராஜ் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக முன்பே பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இருவரும் ரஜினியிடம் கதை கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினி இருவரில் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் நிலவி வருகிறது. கூடிய விரைவில் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story