‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ரஜினிகாந்த்!?

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ரஜினிகாந்த்!?

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனருடன் நடிகர் ரஜினி கூட்டணி அமைக்கவிருப்பதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன.

கடந்த ஆண்டு அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரித்து வர்மா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தனது முதல் படத்திலேயே வெற்றிப் படத்தைக் கொடுத்து அழுத்தமாக கால் தடம் பதித்தார் தேசிங்கு பெரியசாமி. புதுமையான நடிகர்களுடன் மிகவும் துள்ளலான கதைக்களத்துடன் கூடிய படமாக அமைந்திருந்தது.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ரஜினிகாந்த்!?

படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் தேசிங்கு பெரிசாமியை போனில் அழைத்து பாராட்டிய ஆடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது. மேலும் தனக்காகவும் ஒரு கதை பண்ணுமாறு அந்த போன் காலில் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது தேசிங்கு பெரியசாமி ரஜினிகாந்திடம் ஒரு கதையைக் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த சந்திப்பு குறித்து இயக்குனர் அல்லது நடிகரின் தரப்பிலிருந்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ரஜினிகாந்த்!?

தற்போது முன்னணி நடிகர்கள் திறம்மிக்க இளம் இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து வருகின்றனர். அதே வரிசையில் ரஜினிகாந்த் தற்போது இளம் இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து வருகிறார். எனவே இந்தக் கூட்டணி இணைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this story