மீண்டும் களத்திற்குத் திரும்பும் ரஜினிகாந்த்!

மீண்டும் களத்திற்குத் திரும்பும் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த்- சிறுத்தை சிவா கூட்டணியில் அண்ணாத்த படம் உருவாகி வருகிறது. போன் வருடமே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. பின்னர் கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது. கொரோனாவுக்குப் பின்னர் போன வருடம் டிசம்பர் மாதம் மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

மீண்டும் களத்திற்குத் திரும்பும் ரஜினிகாந்த்!

ஆனால் எதிர்பாராத விதமாக படப்பிடிப்பில் ஈடுபட்டவர்களில் சிலருக்கு கொரோனா தாக்கம் ஏற்படவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் ரஜினிகாந்திற்கும் ரத்த அழுத்தம் அதிகமாகி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் வீட்டில் சிகிச்சை ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் தொடக்கம் முதல் ரஜினிகாந்த் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா ,குஷ்பு , பிரகாஷ் ராஜ், சூரி என நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படம் வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி தீபாவளியையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story