பசுமை இந்தியா சேலஞ்சில் பங்கெடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

பசுமை இந்தியா சேலஞ்சில் பங்கெடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று மரங்கன்றுகள் நட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

திரையுலகினர் மத்தியில் ‘க்ரீன் இந்தியா’ சேலஞ்ச் பிரபலமாகி வருகிறது. பல நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் இந்த சேலஞ்சில் ஏற்கெனவே கலந்து கொண்டுள்ளனர்.

தெலுங்கு ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு தனது பிறந்தநாளன்று மரங்கன்று நட்டு பசுமை இந்தியா சேலஞ்சை பூர்த்தி செய்தார். அதோடு அவர் வெளியிட்ட பதிவில் நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்குமாறு பரிந்துரை செய்தார்.

பசுமை இந்தியா சேலஞ்சில் பங்கெடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

அதையடுத்து மகேஷ் பாபுவின் சேலஞ்சை ஏற்ற விஜய் தன்னுடைய வீட்டில் மரக்கன்று நட்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். பின்னர் ஸ்ருதி ஹாசன், ராணா, ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் என பல பிரபலங்கள் மரக்கன்றுகள் நட்டனர்.

Image

தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று மரங்கன்றுகள் நட்டுள்ளார். அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ள ரகுல் “லேட். ஆனால் கடைசியாக ஏற்றுக் கொண்டுவிட்டேன். என்னை பரிந்துரைத்ததற்காக நாகசைதன்யாவிற்கு நன்றி .நான் 3 மரக்கன்றுகளை நட்டிருக்கிறேன். தற்போது நான் நடிகர்களை அல்ல, என் ரசிகர்கள் அனைவரையும் இந்த சேலஞ்சை பரிந்துரைக்க விரும்புகிறேன். ஒவ்வொருவரும் தலா 3 மரங்களை நட்டு, இதைத் தொடரவும்.

நமது பூமியை பசுமையாக வைத்திருப்பது நம் கடமை. இதைத் தொடங்கிய அமைச்சர் சந்தோஷிற்கு சிறப்பு நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story