கொரோனாவில் இருந்து ஒருவாரத்தில் குணமான ரகுல் ப்ரீத் சிங் !

கொரோனாவில் இருந்து ஒருவாரத்தில் குணமான  ரகுல் ப்ரீத் சிங் !

அஜய் தேவ்கன் இயக்கத்தில் மே டே(May Day) என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் தங்கியிருந்த ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,எனக்கு கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நான் நலமாக இருக்கிறேன். நன்றாக ஓய்வெடுப்பேன். அப்பொழுது தானே விரைவில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியும். என்னை சந்தித்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, அனைவரும் பத்திரமாக இருக்கவும் என தெரிவித்திருந்தார்.

கொரோனாவில் இருந்து ஒருவாரத்தில் குணமான  ரகுல் ப்ரீத் சிங் !

இந்நிலையில் ஒருவார இடைவெளிக்கு பின் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமடைந்துள்ள அவர், தனது ட்விட்டர் பக்கத்தில்,

”எனக்கு கோவிட் பாசிட்டிவ் என்ற ரிசல்ட் வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் தற்போது முழுமையாக குணம் அடைந்து விட்டதாக உணர்கிறேன். எனக்காக வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 2021ஆம் ஆண்டு நல்ல பாசிடிவ் எண்ணத்துடனும் நல்ல உடல்நலத்துடனும் தொடங்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அவரது இந்த பதிவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Share this story