சசிகலாவை இயக்கப்போகும் ராம் கோபால் வர்மா…எஸ் மற்றும் ஈ பி எஸ் என்ன செய்தார்கள் ?

சசிகலாவை இயக்கப்போகும் ராம் கோபால் வர்மா…எஸ் மற்றும் ஈ பி எஸ் என்ன செய்தார்கள் ?

க்ளைமேக்ஸ், நேக்கட், த்ரில்லர் போன்ற ஆபாச படங்களை இயக்கி, ஓடிடி தளத்தில் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா .

சசிகலாவை இயக்கப்போகும் ராம் கோபால் வர்மா…எஸ் மற்றும் ஈ பி எஸ் என்ன செய்தார்கள் ?

சமூக ஊடகங்களில் சர்ச்சையான கருத்துகள், அறிவிப்புகள் போன்றவற்றை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் இவர் தற்போது ‘சசிகலா’ என்கிற பெயரில் திரைபப்டம் எடுக்கபோவதாக புதிய ஒரு சர்ச்சையை எழுப்பியுள்ளார்.

90களில் ஷிவா, சத்யா, கம்பெனி, தாவூத் இப்ராஹிமைப் பற்றிய திரைப்படங்கள் எல்லாம் இயக்கி பாலிவுட்டில் பிரபலமான இவர் கடந்த பல வருண்டங்களாக வெற்றிப்படங்களை கொடுக்கவே இல்லை.

இவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், “சசிகலா என்கிற திரைப்படத்தை இயக்கவுள்ளேன். எஸ் என்கிற பெண்ணும், ஈ என்கிற ஆணும் ஒரு தலைவரை என்ன செய்தார்கள் என்பது பற்றிய கதை இது. தமிழக தேர்தலுக்கு முன் திரைப்படம் வெளியாகும். அந்தத் தலைவியின் பயோபிக் வெளியாகும் அதே நாளில் வெளியாகும்.

லக்‌ஷ்மியின் என் டி ஆர் திரைப்படத்தைத் தயாரித்த ராகேஷ் ரெட்டி தான் சசிகலாவை தயாரிக்கிறார். இந்தத் திரைப்படம் ஜே, எஸ் மற்றும் ஈ பி எஸ் ஆகியோருக்கு இடையே இருந்த மிகவும் சிக்கலான, சதிகள் நிறைந்த உறவைப் பற்றியக் கதை.

நெருக்கமாக இருக்கும்போது தான் மிக எளிதாகக் கொல்ல முடியும் – பண்டைய தமிழ் பழமொழி” என பகிரங்கமாக பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த புதிய அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

Share this story