மயக்கம் என்ன யாமினியை, மறந்தோர் யாரேனும் உண்டோ ..!?

மயக்கம் என்ன யாமினியை, மறந்தோர் யாரேனும் உண்டோ ..!?

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ரிச்சா கங்கோபாத்யாய் நடித்து வெளியான திரைப்படம் ”மயக்கம் என்ன”. இந்த படம் வெளியாகி இன்றோடு 9 வருடங்கள் ஆகியுள்ளது. இதனை நினைவு கூறும் வகையில் அப்படத்தில் நடித்த ரிச்சா அவரது ட்விட்டர் பக்கத்தில் சில நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

மயக்கம் என்ன யாமினியை, மறந்தோர் யாரேனும் உண்டோ ..!?

ரிச்சா அப்படத்தில் யாமினி என்கிற கதாபாத்திரத்தில் மிக சிறந்த மனைவியாக நடித்திருப்பார். அவரது அந்த கதாபாத்திரம் அனைவராலும் வரவேற்கப்பட்டது. ஆனால் அப்படத்திற்கு பிறகு எம்.பி.ஏ பட்டபடிப்பின்மேல் ஆர்வம் கொண்ட அவர் நடிப்பை அப்படியே விட்டுவிட்டு படிப்பில் முழு கவனத்தை செலுத்தினார்.

மேலும் படங்களை கைவிட்டதில் அவருக்கு பெரிய வருத்தம் ஒன்றும் இல்லை என்றும் அவர் மனம் திறந்துள்ளார். அவரது நிஜ வாழ்க்கையில் ரிச்சா தான் கார்த்திக் என்றும் யாமினி அவருடைய கணவர் ஜோ என்றும் அவர் எல்லாவற்றிலும் அவருக்கு ஆதரவளிப்பதாகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

மயக்கம் என்ன யாமினியை, மறந்தோர் யாரேனும் உண்டோ ..!?

34 வயதான ரிச்சா தனது சக மாணவனான ஜோ வை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன.

Share this story