நான் அப்டி பேசியிருக்கக் கூடாது… ரஜினி பற்றிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ஆர்ஜே பாலாஜி!

நான் அப்டி பேசியிருக்கக் கூடாது… ரஜினி பற்றிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ஆர்ஜே பாலாஜி!

நடிகர் ஆர்ஜே பாலாஜி தான் “ரஜினி குறித்து அளித்த பேட்டியில் நான் அப்படி பேசியிருக்கக் கூடாது” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆர்ஜே பாலாஜி நயன்தாராவை வைத்து ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆர்ஜே பாலாஜியும் அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளி அன்று டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. அதையடுத்து நேற்று ட்விட்டரில் ஆர்ஜே பாலாஜி ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது “ரஜினி சார் பற்றி சில வார்த்தைகள் என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

நான் அப்டி பேசியிருக்கக் கூடாது… ரஜினி பற்றிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ஆர்ஜே பாலாஜி!

அதற்கு பதிலளித்த ஆர்ஜே பாலாஜி “நான் சூப்பர் ஸ்டாரோட ரொம்ப ரொம்ப ரொம்ப பெரிய ஃபேன். சின்ன வயசுல ரஜினி ஒரு நல்ல மனுஷன் அப்டினு எங்க தாத்தா சொன்னாரு. அது இன்னைக்கு வரைக்கும் என் மனசுல ஆழமா பதிஞ்சிருக்கு. அவர் அற்புதமான மனிதர். சூப்பர் மேன். தளபதியில் இருந்து தர்பார் வரைக்கும் எனக்கு அவரோட அவ்ளோ மெமரிஸ் இருக்கு. கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி அவரு அரசியலுக்கு வர்றதப் பத்தி ஒரு பேட்டி கொடுத்திருப்பேன். அப்புறம் பாக்கும் போதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும். அப்டி பேசியிருக்கக் கூடாதுன்னு தோணும். நான் அதுக்காக வருத்தப்படறேன். அவரு நிறைகுறை எல்லா காரியமும் நடிக்கணும்னு கடவுளை நான் வேண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story