அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கிலிருந்து விலகிய சாய் பல்லவி!

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கிலிருந்து விலகிய சாய் பல்லவி!

அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இருந்து நடிகை சாய் பல்லவி விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மலையாளத்தில் மறைந்த இயக்குனர் சச்சி இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் வெளியாகிய ‘அய்யப்பனும் கோஷியும்‘ திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

தற்போது இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆக்கவுள்ளது. தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி இருவரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தை சூர்யா தேவர நாகவம்சி தயாரிக்க உள்ளார்.

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கிலிருந்து விலகிய சாய் பல்லவி!

பிஜு மேனன் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளார். பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் முதலில் ராணா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது சாய் பல்லவி அந்தப் படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. பல்வேறு படங்களில் இடைவிடாமல் நடித்து வருவதால் தேதி பற்றாக்குறை காரணமாக அவர் இப்படத்திலிருந்து விலக்கியதாகவும் கூறப்படுகிறது.

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கிலிருந்து விலகிய சாய் பல்லவி!

இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடி என்பதால் முழு படத்தையும் அவரே ஆக்கிரமித்துக் கொள்வார். சாய் பல்லவிக்கு போதுமான இடம் கிடைக்காது என்றும் ஒரு பேச்சு இருந்தது.

சில தினங்களுக்கு முன்பு சாய் பல்லவி நடிப்பார் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில் அவர் வெளியேறியிருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Share this story