ஷாருக் கானைக் காப்பாற்ற களமிறங்கும் சல்மான்… எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் அப்டேட்!

ஷாருக் கானைக் காப்பாற்ற களமிறங்கும் சல்மான்… எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் அப்டேட்!

பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் சினிமாவில் இருந்து நீண்ட ஓய்வில் இருக்கிறார். அவர் கடைசி படம் வெளியாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ‘ஜீரோ’ படத்தின் தோல்வியால் சினிமாவில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார் ஷாருக் கான்.

ஷாருக் கானைக் காப்பாற்ற களமிறங்கும் சல்மான்… எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் அப்டேட்!

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘பதான்’ என்ற ஆக்ஷன் படத்தில் ஷாருக் நடித்து வருகிறார். இந்தப் படம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.

இந்தப் படத்தில் ரஷ்யாவில் ஒரு பெரிய ஆக்ஷன் காட்சி இடம் பெற உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பகுதியில் ஷாருக் கான், ரஷ்ய மாஃபியா கும்பலுடன் எதிர்த்து சண்டையிடுவார் என்று கூறப்படுகிறது. அப்போது அங்கு ஷாருக் கான் அந்த கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் போது சல்மான் தான் வந்து காப்பாற்றப் போகிறாராம்.

ஷாருக் கானைக் காப்பாற்ற களமிறங்கும் சல்மான்… எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் அப்டேட்!

ஆம், இந்தப் படத்தில் நடிகர் சல்மான் ஏற்கனவே ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. பாலிவுட்டின் இரண்டு மெஹா நடிகர்கள் இணைவதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படக்குழு ரஷ்யா செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தப் படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

Share this story