கொரோனவால் தந்தையை இழந்த 18 வயது சிறுவனுக்கு உடனடியாக உதவிய சல்மான் கான்!

கொரோனவால் தந்தையை இழந்த 18 வயது சிறுவனுக்கு உடனடியாக உதவிய சல்மான் கான்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தந்தையை இழந்த 18-வயது இளைஞனுக்கு உதவி செய்துள்ளது பலரது மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.

கொரோனாவால் இந்திய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு பலரும் உதவி வருகின்றனர். குறிப்பாக திரைத்துறை பிரபலங்கள்.

கொரோனவால் தந்தையை இழந்த 18 வயது சிறுவனுக்கு உடனடியாக உதவிய சல்மான் கான்!

தற்போது கர்நாடகாவைச் சேர்ந்த 18 வயது இளைஞனுக்கு சல்மான் கான் செய்துள்ள உதவி கவனம் பெற்று வருகிறது.

கொரோனா காரணமாக தந்தையை இழந்து தவித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த 18 வயது இளைஞன் ட்விட்டரில் உதவி கோரியிருந்தார். அதை வ சேனா தலைவர் ராகுல் கனால், சல்மான் கான் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். சல்மான் கான் உடனடியாக அந்தச் சிறுவனுக்கு அத்தியாவசிய பொருட்கள், கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார். மேலும் நான் இருக்கிறேன், உன்னுடைய முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்தையும் வழங்குவேன் என்று சல்மான் கான் உறுதியளித்துள்ளார். சல்மான் கானின் இந்த செயல் பாரட்டைப் பெற்று வருகிறது.

Share this story