பூங்காவில் உள்ளாடையுடன் உடற்பயிற்சி செய்ததால் தாக்கப்பட்ட ‘கோமாளி’ பட நடிகை!
கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது நண்பர்களுடன் ஒரு பூங்காவிற்கு உடற்பயிற்சி செய்ய சென்றபோது சமூக ஆர்வலர் ஒருவரால் துன்புறுத்தப்பட்டுள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்யுக்தாவும் அவரது மூன்று நண்பர்களும் ஒரு வளையத்துடன் உடற்பயிற்சி செய்ய பூங்காவிற்குச் சென்றுள்ளனர். அங்கு மேலே அணிந்திருந்த ஸ்போர்ட்ஸ் ஜாக்கட்டை கழற்றி விட்டு விளையாட்டு உள்ளாடையுடன்(Sports Bra) உடற்பயிற்சி செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த சமூக ஆர்வலர் ஒருவர் இவர்கள் பொதுவெளியில் இந்த மாதிரி கவர்ச்சியான உடையில் இருப்பதாக அவற்றைப் பதிவு செய்யத் தொடங்கினார். பின்னர் அவர் சம்யுக்தாவைடீ தாக்கியுள்ளார். இது சம்யுக்தாவால் மற்றொரு தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
View this post on Instagram
இதற்கிடையில், சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘லைவ்’ ஆக முழு சம்பவத்தையும் நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கினார். பின்னர் பல வாக்குவாதங்களுக்குப் பிறகு, சம்யுக்தா தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்தாததால், போலீசார் அவளை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். சம்யுக்தா காவல் நிலையத்திலிருந்து மீண்டும் லைவ்-வில் வீடியோ ஒளிபரப்பத் தொடங்கியபோது, ஒரு இன்ஸ்பெக்டர் நேரலை நிறுத்துமாறு மிரட்டினார், இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.