ஆஜித் நல்லா விளையாடினாலும் ஜெயிக்க முடியாது… சம்யுக்தா பதில்!

ஆஜித் நல்லா விளையாடினாலும் ஜெயிக்க முடியாது… சம்யுக்தா பதில்!

விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் சீசனில் கடைசியாக சம்யுக்தா வெளியேறியுள்ளார். ஜித்தன் ரமேஷ் தான் வெளியேறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சம்யுக்தா வெளியேறியது பலருக்கு அதிர்ச்சியளித்தது.

Image

பல நாட்கள் கழித்து வீடு திரும்பிய சம்யுக்தாவை அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து கேக் வெட்டிக் கொண்டாடி குதூகலித்தனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது சம்யுக்தாவிற்கு மக்கள் பெரும் ஆதரவு கொடுத்து வந்தது உண்மை தான். இருந்தாலும் அவர் எப்படி வெளியேறினார் என்று பிக்பாஸ் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

Image

இந்நிலையில் வெளியே வந்துள்ள சம்யுக்தா முதல் முறையாக பேட்டி அளித்துள்ளார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நன்றாக விளையாடினாலும் கடைசியில் ஜெயிக்க முடியாது என்று யாரை நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு “ஆஜித் சரியாக விளையாடி வருகிறார். ஆனால் அவர் ஜெயிப்பது கொஞ்சம் கஷ்டம்” “ரம்யாவும் நன்றாக விளையாடுகிறார், ரம்யா வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Share this story