‘டோனி’ படத்தின் நடிகர் திடீரென தற்கொலை…

‘டோனி’ படத்தின் நடிகர் திடீரென தற்கொலை…

சுஷாந்த்தை தொடர்ந்து டோனி படத்தின் மற்றொரு நடிகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘டோனி’ படத்தின் நடிகர் திடீரென தற்கொலை…

கூல் கேப்டன் என்று ரசிகர்களால் அன்போடு அழைப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ்.டோனியின் வாழ்க்கை படமாக உருவானது. இந்த படத்தில் டோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் சுஷாந்த் சிங். இந்த படத்தில் டோனி போன்று இவர் நடித்தது ரசிகர்களின் பாராட்டு பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வந்தார். ஆனால் ஏதோ பிரச்சனையால் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த சுஷாந்த், அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் இந்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

‘டோனி’ படத்தின் நடிகர் திடீரென தற்கொலை…

இந்த நிலையில் டோனி படத்தில் நடித்திருந்த மற்றொரு நடிகரான சந்தீப் நஹார், இன்று மும்பை கொரேகானில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டோனி நடிகர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துக்கொள்வது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘டோனி’ படத்தின் நடிகர் திடீரென தற்கொலை…

இதையடுத்து தற்கொலை செய்வதற்கு முன் சந்தீப் நஹார் வீடியோ ஒன்றை சமூக இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனவேதனை அடைந்ததாகவும், அதனால் தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

Share this story