பிரம்மாண்ட வரலாற்று படம் எடுக்க இயக்குனர் சங்கர் திட்டம் ?

பிரம்மாண்ட வரலாற்று படம் எடுக்க இயக்குனர் சங்கர் திட்டம் ?

பிரம்மாண்ட வரலாற்று பின்னணியை கொண்ட புதிய படத்தை இயக்குனர் சங்கர் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட வரலாற்று படங்களை இயக்க பல இயக்குனர் ஆர்வமாக உள்ளனர். அந்த வரிசையில் ஆர்.ஆர்.ஆர் என பெயரிடப்பட்டுள்ள வரலாற்று படத்தை திரும்பவும் இயக்கி வருகிறார் ராஜமௌலி. இதேபோன்று இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் காவியத்தை படமாக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் பெற்ற சங்கரும் இணைந்துள்ளார்.

பிரம்மாண்ட வரலாற்று படம் எடுக்க இயக்குனர் சங்கர் திட்டம் ?

இயக்குனர் சங்கர் தற்போது கமலை இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். 1996ம் ஆண்டு கமல் இரட்டை வேடத்தில் நடித்து வெற்றிப் பெற்ற இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாகிறது. இந்தியன் 2 படத்தில் நடிகர் சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பிரம்மாண்ட வரலாற்று படம் எடுக்க இயக்குனர் சங்கர் திட்டம் ?

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தநிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. பின்னர் கொரானா பிரச்சனையால் ஆரம்பிக்காமல் இருந்த ஷூட்டிங், கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிரம்மாண்ட வரலாற்று படம் எடுக்க இயக்குனர் சங்கர் திட்டம் ?
kamal haasan shankar indian 2 movie

இந்நிலையில் இயக்குனர் சங்கர் வரலாற்று படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். போர் காட்சிகள் நவீன தொழிற்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகிறது. பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழி நடிகர்கள் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் கேஜிஎப் படத்தின் ஹீரோ யாஷ் உள்ளிட்ட 4 பெரிய நடிகர்கள் நடிக்க உள்ளனர். இந்தியன் 2 படத்தை முடித்தப்பிறகு இந்த படத்தின் பணிகள் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Share this story