படப்பிடிப்பை தள்ளி வைச்ச மகேஷ் பாபு… ஏன் தெரியுமா ?

படப்பிடிப்பை தள்ளி வைச்ச மகேஷ் பாபு… ஏன் தெரியுமா ?

கொரானாவின் எதிரொலியாக தனது படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளார் மகேஷ் பாபு.

இந்தியாவே அஞ்சி நடுங்கி வருகிறது கொரானாவின் உச்சக்கட்ட தாக்குதலுக்கு. குறுகிய காலத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் பலி எண்ணிக்கை இந்தியாவில் உச்சத்தை தொட்டு வருகிறது. ஆக்சிஜன் தட்டுபாட்டால் மாநிலங்கள் தடுமாறியும் வருகின்றனர். கொரானா தடுப்பூசி பற்றாக்குறை, ரெம்டசிபர் மருந்து பற்றாக்குறை உள்ளிவைகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறோம்.

படப்பிடிப்பை தள்ளி வைச்ச மகேஷ் பாபு… ஏன் தெரியுமா ?

இதனால் ஏராளமான மக்கள் தினந்தோறும் உயிரிழந்து வருவதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது. உலக நாடுகளும் அணி திரண்டு இந்தியாவுக்கு உதவி வருகின்றனர். இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தொழில்கள் முடக்கம், சராசரி வாழ்க்கையில் தடுமாற்றம், போக்குவரத்து வசதி துண்டிப்பு போன்ற இன்னல்களை சந்தித்து வருகிறோம்.

படப்பிடிப்பை தள்ளி வைச்ச மகேஷ் பாபு… ஏன் தெரியுமா ?

அந்த வகையில் சினிமா படங்களின் ஷூட்டிங்கையும் பல முன்னணி ஹீரோக்கள் நிறுத்தி வருகின்றன. நடிகத் மகேஷ்பாபும் தற்போது நடித்து வந்த ’சர்காரு வாரி பாட்டா’. படத்தை நிறுத்த சொல்லிவிட்டார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 35 நாட்களாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. படத்தில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஷூட்டிங்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதை மீண்டும் குறுகிய காலத்தில் தொடங்கவேண்டாம் எனவும், ஜூலைக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என கண்டிப்பாக சொல்லி விட்டாரம் மகேஷ் பாபு.

Share this story