‘கர்ணன்’ தொலைக்காட்சி உரிமையை அதிக விலைக்கு கைப்பற்றிய ஜீ தமிழ்… எவ்ளோ தெரியுமா!?

‘கர்ணன்’ தொலைக்காட்சி உரிமையை அதிக விலைக்கு கைப்பற்றிய ஜீ தமிழ்… எவ்ளோ தெரியுமா!?

‘கர்ணன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் அதிக விலைக்கு வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘கர்ணன்‘ திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகை ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

‘கர்ணன்’ தொலைக்காட்சி உரிமையை அதிக விலைக்கு கைப்பற்றிய ஜீ தமிழ்… எவ்ளோ தெரியுமா!?

இப்படத்திற்கு கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கர்ணன் படத்திலிருந்து வெளியான ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடல் தாறுமாறு ஹிட் ஆகியுள்ளது. இரண்டாவது பாடல் மார்ச் 2-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 9-ம் தேதி இப்படம் வெளியாக உளது.

அதையடுத்து இந்தப் படத்திற்கு நல்ல பிசினஸ் இருக்கிறது என்று கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றன. தற்போது கர்ணன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் சேனல் பத்து கோடிக்கு வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this story