தேனிசைத் தென்றல் குரலில் கர்ஜிக்கும் கர்ணன் படத்தின் இரண்டாம் பாடல்!

தேனிசைத் தென்றல் குரலில் கர்ஜிக்கும் கர்ணன் படத்தின் இரண்டாம் பாடல்!

இசையமைப்பாளர் தேவாவின் குரலில் கர்ணன் படத்தின் இரண்டாம் பாடலான பண்டாரத்தி பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் படம் உருவாகியுள்ள கர்ணன் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. ரெஜிஷா விஜயன், லால், கௌரி கிஷன் உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

தேனிசைத் தென்றல் குரலில் கர்ஜிக்கும் கர்ணன் படத்தின் இரண்டாம் பாடல்!

இப்படத்திலிருந்து முதலாக வெளியான ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சமூக ஊடங்களில் தற்போது வரை பேசுபொருளாக இருந்து வருகிறது இந்தப் பாடல்.

அதையடுத்து தற்போது இரண்டாவதாக பண்டாரத்தி பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை தேனிசைத் தென்றல் தேவா பாடியுள்ளார். யுகபாரதி வரிகள் எழுதியுள்ளார்.

கிராமப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து வரும் மாரி செல்வராஜ் இந்தப் படத்தில் மேளம், நாதஸ்வர கலைஞர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். மனதை உருக்கும் ஒப்பாரி பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. கண்டா வரச் சொல்லுங்க பாடலைப் போல இந்தப் பாடலும் ஹிட் அடிக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

Share this story