அவர் மீது காதல் வந்தது எப்படி ?… செல்வராகவனின் மனைவி பளீர்…

அவர் மீது காதல் வந்தது எப்படி ?… செல்வராகவனின் மனைவி பளீர்…

‘கானல் நீர்’ திரைப்படத்தின் மூலம்தான் செல்வராகவன் மீது காதல் வந்ததாக அவரது மனைவி கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.

தமிழின் முன்னணி இயக்குனராக உள்ள செல்வராகவன், ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படம் மாபெரும் ஹிட்டடித்தது.

அவர் மீது காதல் வந்தது எப்படி ?… செல்வராகவனின் மனைவி பளீர்…

செல்வராகவன் ஒரு படம் இயக்குகிறார் என்றாலே, அது ரசிகர்களிடையே தனி கவனம் பெறும். அந்தளவுக்கு அவர் இயக்கத்தில் வெளிவரும் படங்கள் இருக்கும். சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வெற்றிக்கரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து தனுஷை வைத்து ‘நானே வருவேன்’, ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ போன்ற படங்களை இயக்கவுள்ளார்.

அவர் மீது காதல் வந்தது எப்படி ?… செல்வராகவனின் மனைவி பளீர்…

இந்நிலையில் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2010-ம் ஆண்டு செல்வராகவன் உருவாக்கிய ‘கானல் நீர்’ படத்தின் கதையை படித்தேன். அப்போது ஏற்பட்ட அன்பு காதலாக மாறியது. அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துக்கொண்டோம். இந்த படம் ‘இரண்டாம் உலகம்’ என்ற பெயரில் வெளியானது என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this story