ப்பா… என்னவொரு பாட்டு… என்ஜாய் எஞ்சாமியைப் புகழ்ந்த செல்வராகவன்!

ப்பா… என்னவொரு பாட்டு… என்ஜாய் எஞ்சாமியைப் புகழ்ந்த செல்வராகவன்!

சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியாகியுள்ள என்ஜாய் எஞ்சாமி பாடலை இயக்குனர் செல்வராகவன் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் சுயாதீன கலைஞர்களுக்காக மாஜா என்ற தளத்தை உருவாக்கியுள்ளார். இந்தத் தளத்திற்காக சந்தோஷ் நாராயணன் தன் இசை மற்றும் தயாரிப்பில் என்ஜாய் எஞ்சாமி பாடலை உருவாகியுள்ளார்.

ப்பா… என்னவொரு பாட்டு… என்ஜாய் எஞ்சாமியைப் புகழ்ந்த செல்வராகவன்!

இந்தப் பாடலை தீ மற்றும் தெருக்குரல் அறிவு இருவர் பாடி நடித்துள்ளனர். தற்போது என்ஜாய் எஞ்சாமி பாடல் தான் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது. இளைஞர்கள் மத்தியில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ப்பா… என்னவொரு பாட்டு… என்ஜாய் எஞ்சாமியைப் புகழ்ந்த செல்வராகவன்!

இந்தப் பாடலை திரைத்துறை பிரபலங்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில் இயக்குனர் செல்வராகவன் இந்தப் பாடலைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

“என்னவொரு அற்புதமான பாடல். அற்புதமான உருவாக்கம். பாடலை மிகவும் பிடித்துவிட்டது. தீ, அறிவு மற்றும் மொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார்.

Share this story