சந்தானம், செல்வராகவன் கூட்டணியில் உருவாகி பாதியில் கைவிடப்பட்ட படம்…மீண்டும் தொடக்கம்!?

சந்தானம், செல்வராகவன் கூட்டணியில் உருவாகி பாதியில் கைவிடப்பட்ட படம்…மீண்டும் தொடக்கம்!?

செல்வராகவன் மற்றும் சந்தானம் கூட்டணியில் உருவாகி பாதியில் கைவிடப்பட்ட ‘மன்னவன் வந்தானடி’ என்ற திரைப்படம் மீண்டும் தொடங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சினிமாவில் தன் வித்தியாசமான கதைக்களங்களால் தமிழ் ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்த இயக்குனர் தான் செல்வராகவன். இவர் படங்களில் வரும் ஹீரோக்கள் ரொமான்ஸில் கலக்கும் அழகு ஆண்களாகவோ, மாஸ் காட்டும் மனிதராகவோ இருக்கமாட்டார்கள். செல்வராகவனின் ஹீரோக்கள் நாம் நமது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவரை அப்படியே திரையில் பார்ப்பது போல் இருக்கும். அதேபோல் தான் கதாநாயகிகளும்.
Selvaraghavan-Santhanam's 'Mannavan Vanthanadi' runs into trouble | The  News Minute
2016 ஆம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் அந்தப் படம் குறித்து கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆதிதி போஹங்கர் கதாநாயகியாக நடித்துவந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசைமைப்பதாக இருந்தத. பின்னர் நிதி சிக்கல்களால் இந்தப் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.’மன்னவன் வந்தனாடி’ படம் 2016-ம் ஆண்டில் பல்வேறு இடங்களில் ஷூட்டிங் செய்யப்பட்டது.  கிட்டத்தட்ட 80 சதவீத படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. பின்னர் நிதி நெருக்கடியால் கைவிடப்பட்ட இந்தப் படம் தற்போது மீண்டும் தொடங்க இருக்கிறது.

ரேடியன்ஸ் மீடியாவின் வருண் மணியன் என்பவர் இப்படத்தை கையிலெடுத்துள்ளார். மீதமுள்ள 20 சதவீத படப்பிடிப்பை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளார். சந்தானமும் இந்தப் படத்திற்கு முன்னுரிமை அளித்து நடித்துக் கொடுப்பதாகத் உறுதி அளித்துள்ளாராம்.

Share this story