அவர் இசையை உருவாக்கவில்லை… ஏஆர் ரஹ்மான் குறித்து செல்வராகவன் வெளியிட்டுள்ள ட்வீட்!

அவர் இசையை உருவாக்கவில்லை… ஏஆர் ரஹ்மான் குறித்து செல்வராகவன் வெளியிட்டுள்ள ட்வீட்!

இயக்குனர் செல்வராகவன் புகழ்ந்து வெளியிட்டுள்ள ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர். வழக்கமான தமிழ் சினிமா கிளிஷேக்களை தனது படங்கள் மூலம் உடைத்தெறிந்தவர். காதல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று காண்பிக்கப்பட்ட கோணத்தை முற்றிலும் திசை திருப்பியவர் செல்வராகவன். செல்வராகவனின் பெரும்பாலான படங்களில் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்திருப்பார். செல்வராகவன் வடித்த சிலைக்கு யுவனின் இசை மெருகூட்டி முழு வடிவம் கொடுக்கும். அந்தளவிற்கு இருவருக்குமிடையே ஒரு பிணைப்பு தொடர்ந்து வருகிறது.

தற்போது செல்வராகவன் ஏஆர் ரஹ்மானைப் புகழ்ந்து ட்வீட் ஒன்றை வெளியிட்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த டீவீட்டில் “என்னவென்று சொல்வது. என் வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களில் ஏஆர் ரஹ்மான் சாரின் இசையைக் கேட்டு வந்துள்ளேன். அவர் நம் காலத்தின் மிகச் சிறந்த இசை ஆளுமைகளில் ஒருவர். அவர் உருவாக்குவது வெறுமனே அழகான இசை மட்டுமல்ல. அவை தெய்வீக ஆனந்தத்தின் பார்வைகள்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story