அரை நிர்வாண படம் எடுத்து மிரட்டல்… கணவர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்…

அரை நிர்வாண படம் எடுத்து மிரட்டல்… கணவர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்…

அரை நிர்வாண வீடியோ எடுத்து தன்னை மிரட்டுவதாக சீரியல் நடிகை ஜெனிபர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அரை நிர்வாண படம் எடுத்து மிரட்டல்… கணவர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்…

‘வானத்தைப்போல’, ‘செம்பருத்தி’ ஆகிய சீரியல் நடித்து புகழ்பெற்றவர் ஜெனிபர். சென்னை மணலியை சேர்ந்த இவருக்கும், சரவணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அடிக்கடி இருவருக்கிடையே ஏற்பட்ட சண்டையால் மன கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அதன்பிறகு நீதிமன்றத்தில் இருவரும் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.

அரை நிர்வாண படம் எடுத்து மிரட்டல்… கணவர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்…

பின்னர் சீரியல் ஒன்றில் நடித்துபோது உதவி இயக்குனர் நவீன்குமாருடன் ஜெனிபருக்கு காதல் ஏற்பட்டது. அதன்பிறகு திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வந்தனர். ஜெனிபர் தனது முதல் திருமணத்தை நவீனிடம் மறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நவீன், ஜெனிபர் வீட்டில் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது நடந்த பிரச்சனையில் நவீனுக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. இந்த வழக்கு தற்போது மணலி காவல்நிலையில் நடைபெற்று வருகிறது.

அரை நிர்வாண படம் எடுத்து மிரட்டல்… கணவர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்…

இந்நிலையில் தன்னை கடத்தியதாக நவீன் மீது புகார் ஒன்றை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெனிபர் கொடுத்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவீனுக்கு வேலை பறிபோனதால் 2.5லட்சம் ரூபாய் கடனாக தன்னிடம் வாங்கியிருந்தார். அது போதவில்லை என்று கூறி மீண்டும் 5 லட்ச ரூபாய் கடனாக கேட்டார். நான் மறுத்ததால் என்னை காரில் கடத்திச் சென்று அரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்தார்.

அரை நிர்வாண படம் எடுத்து மிரட்டல்… கணவர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்…

தான் கேட்ட பணத்தை தரவில்லை என்றால் அந்த வீடியோவை இணையத்தில் விட்டு விடுவேன் என்று மிரட்டினார். இதையடுத்து எனது தங்கையையும் கடத்தி மானபங்கப்படுத்தினர். இது குறித்து மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக என் மீது விபச்சார வழக்கு போடுவதாக ஆய்வாளர் சிட்டிபாபு என்னை மிரட்டினார். தொடர்ந்து நவீனின் தந்தை தரப்பிலிருந்து கொலை மிரட்டல் வருவதாகவும், உடனடியாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Share this story