பிரபல சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. வாழ்த்தும் ரசிகர்கள் !
சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக அவரே தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
சேனல்களில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நக்ஷத்ரா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நக்ஷத்ரா. பின்னர் சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘வாணி ராணி’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு நடிகையாக அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து சன் டி.வி.யில் குஷ்புவுடன் நடித்த லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக புகழ் பெற்றார். அதில் பஞ்சுமிட்டாய் என்ற அவருடைய பட்டப்பெயர் ரசிகர்களை கவர்ந்தது. பின்னர் ரோஜா, மின்னலே, நாயகி, திருமகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
சீரியல் மட்டுமல்லாமல் படங்களிலும் நடித்துள்ளார் நக்ஷத்ரா. சேட்டை, மிஸ்டர் லோக்கல், இரும்புகுதிரை, வாயை மூடி பேசவும் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த தனது காதலர் ராகவ் குறித்து சமூகவலைத்தளத்தில் தெரிவித்திருந்தார் நக்ஷத்ரா. இதையடுத்து இன்று தனக்கும், ராகவுக்கும் நிச்சயம் நடந்துள்ளதாக தனது இன்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ள நக்ஷத்ரா, மோதிரங்களை இருவரும் கையில் வைத்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதனால் நக்ஷத்ராவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.