உள்ளாடை சைஸ் கேட்ட நபர்… நெத்தியடி பதில் கொடுத்த ‘நாகினி’ சீரியல் நடிகை

உள்ளாடை சைஸ் கேட்ட நபர்… நெத்தியடி பதில் கொடுத்த ‘நாகினி’ சீரியல் நடிகை

உள்ளாடை சைஸ் கேட்ட நபருக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் சீரியல் நடிகை சயந்தினி கோஷ்.

உள்ளாடை சைஸ் கேட்ட நபர்… நெத்தியடி பதில் கொடுத்த ‘நாகினி’ சீரியல் நடிகை

நடிகைகள் மீதான பாலியியல் சீண்டல்கள் என்பது காலம்காலமாய் தொடர்ந்துக்கொண்டேதான் செல்கிறது. தற்போதைய புதுயுகத்தில் இது இணையம் வாயிலாக நடைபெற தொடங்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்கும் நடிகைகளிடம் பாலியல் ரீதியான கேள்வி கேட்டு, அவர்களை சங்கடப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது.

உள்ளாடை சைஸ் கேட்ட நபர்… நெத்தியடி பதில் கொடுத்த ‘நாகினி’ சீரியல் நடிகை

இந்த வரிசையில் பிரபல சீரியல் நடிகை சயந்தினி கோஷ் சிக்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரின் மூலம் அறிமுகமானவர் சயந்தினி. இந்த தொடரில் சயந்தினி நடித்த சத்யாவதி கேரக்டர் மிகவும் பிரபலம். இதைத்தொடர்ந்து நாகினி 4வது சீசனில் நாகினியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர். பின்னர் சல்மான் கான் இந்தியில் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 6வது சீசனில் கலக்கியிருந்தார்.

உள்ளாடை சைஸ் கேட்ட நபர்… நெத்தியடி பதில் கொடுத்த ‘நாகினி’ சீரியல் நடிகை

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் தனது உள்ளாடை சைஸ் குறித்து நபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்தது சமூக வலைத்தளத்தில் டிரெண்ட்டாகி வருகிறது. இது குறித்து கூறியுள்ள அவர், பெண்களின் மார்பகம் மீதான மோகம் ஏன் என்று எனக்கு தெரியவில்லை. இதை சொல்லும்போது எனக்கு தலை சுற்றுகிறது. இதுபோன்ற பாலியியல் சீண்டல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பெண்கள் உடலம்பைப்பிற்கு எதிராக பெண்கள் பேசவேண்டும் என்றார். ஆண்கள் என் மார்பகத்தை முறைத்துப் பார்க்கும் போது நானும் சங்கடமாக உணர்கிறேன். இந்த நிலை தொடரக்கூடாது. உங்களை அவமதிக்கும் எவராயினும் அதற்கு திருப்பி பதில் கூறுங்கள் என்று காட்டமாக தெரிவித்தார்.

Share this story